1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinoj
Last Updated : செவ்வாய், 7 ஜூலை 2020 (17:26 IST)

பல லட்சம் இந்தியர்களுக்கு வேலையிழப்பு…? வரை மசோதா தாக்கல் !

குவைத் நாட்டில் உள்ள மக்கள் தொகையில் அதிகமாக வெளிநாடுகளைச் சேர்ந்தோராக உள்ளதால் அங்கு 15% மேல் பிற நாட்டினரை அனுமதிக்கக் கூடாது என்ற மசோதாவுக்கு அந்த நாட்டின் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த வரைவுக்குழு மசோதா நிறைவேற்றப்பட்டால் அங்குள்ள சுமார் 14.50 லட்சம் இந்திய மக்கள் வேலை வாய்ப்புகளை இழந்து , வருமானத்தை இழந்து சொந்த நாட்டுக்குத் திரும்பும் நிலை ஏற்படும் என தெரிகிறது.

 குவைத்தில் உள்ள இந்திய மக்கள் வருடம் தோறும் பல்லாயிரக்கணக்கான ரூபாய்களை இந்தியாவுக்கு அனுப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.