Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த குறிப்புகளை பயன்படுத்தி சமையலை ருசியானதாக மாற்ற சில டிப்ஸ்....!

Updated: திங்கள், 3 ஜூன் 2019 (15:28 IST)
 
சர்க்கரை வள்ளிக்கிழங்கை வேகவைத்துக் தோலுரித்து அடை மாவில் சேர்த்துப் பிசைந்து அடை செய்தால் மிருதுவாகவும், ருசியாகவும்  இருக்கும்.
 
ஆப்பம் செயும்போது மாவின்மேல் பரவலாகத் தேங்காய்த் துருவல், கேரட் துருவல் தூவி மூடிவைத்து எடுத்தால் சுவையாகவும்  கலர்புல்லாகவும் இருக்கும்.
 
தோசை வார்க்கும்போது கடினமாக வந்தால், சாதம் வடித்த கஞ்சியைச் சிறிதளவு மாவில் கலந்து வார்த்துப் பாருங்கள். தோசை பூப்போல  மிருதுவாக இருக்கும்.
 
புழுங்கல் அரிசியுடன்  தக்காளிப் பழம் சேர்த்து அரைத்து தோசை வார்த்தால் டேஸ்ட்டாக இருக்கும்.
தோசை மாவு அதிகம் புளித்துவிட்டால், ஒரு பங்கு மாவுக்கு கால் பங்கு ரவையுடன் இரண்டு வெங்காயம் சிறிது மிளகு - சீரகம், ஒரு பச்சை  மிளகாய் இவற்றை சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்றுச் சுற்றி மாவில் கலந்து தோசை வார்த்தால் மணமாகவும் ருசியாகவும்  இருக்கும்.
 
தோசை மாவில் சிறிது பெருங்காயப் பொடியைக் கலந்து சுட்டால் தோசை வாசனை கமகமக்கும்.
 
அடைக்கு அரைக்கும்போது அரிசி, பருப்பு பொன்றவற்றுடன் சிறிது புளியும் சேர்த்து அரைத்தால் அடை, மிகவும் ருசியாக இருக்கும்.

எல்லாம் காட்டு

உடல் நலம் சரியில்லாதபோது என்ன சாப்பிட வேண்டும்?!.. வாங்க பார்ப்போம்!..

உறுப்புகளின் ஆரோக்கியத்தை ஆதரிக்கும் உணவுகள்.. வாங்க பார்ப்போம்!...

இஞ்சி எதனுடன் எப்படி சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்..?

இரவில் சிக்கன் சாப்பிடலாமா?!.. மருத்துவர்கள் சொல்வது என்ன?..

ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் அளவில் கடுமையாக சரிவு - ஆய்வில் அதிர்ச்சி தகவல்!..

அடுத்த கட்டுரையில்
Show comments