வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. சட்டசபை தேர்தல் 2016
Written By K.N.Vadivel
Last Modified: வியாழன், 19 மே 2016 (17:43 IST)

திமுக வேட்பாளரை அல்லாக்கா தூக்கி மல்லாக்க வீசிய ராணுவத்தினர்

திமுக வேட்பாளரை அல்லாக்கா தூக்கி மல்லாக்க வீசிய ராணுவத்தினர்

நெல்லையில் திமுக வேட்பாளர் அப்பாவுவை தேர்தலுக்கு பாதுகாப்புபணிக்கு வந்த துணை ராணுவத்தினர் அல்லாக்கா தூக்கி மல்லாக்க வீசினர்.
 

 
நெல்லை மாவட்டம், ராதாபுரம் தொகுதியில் திமுக சார்பில் அப்பாவு போட்டியிட்டார்.  ராதாபுரம் தொகுதியில் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் தபால் வாக்குகளை தேர்தல் அதிகாரிகள் புறக்கணித்ததாக கூறப்படுகிறது. இதனால், அப்பாவு வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்திற்கு வெளியில் திடீர் போராட்டத்தில் குதித்தார். அவருடன் தேர்தல் அதிகாரிகள் சமாதானம் செய்ய முயனறனர். ஆனால், அதற்கு அப்பாவு உடன்படவில்லை. மேலும், அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, போராட்டத்தில் குதித்தார். 
 
இதனால், அப்பாவு-வை அல்லாக்கா தூக்கி மல்லாக்க துணை ராணுவப்படையினர் வீசினர். அப்படியும் போராட்டத்தில் குதித்தார்.