1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 26 ஜூன் 2020 (07:54 IST)

அழகு ராணி... கவர்ச்சிக்கு கேட் போட்டு இழுத்து மூடிய யாஷிகா ஆனந்த்!

அடல்ட் வாசிகளின் கனவு கன்னியாக திகழ்பவர் நடிகை யாஷிகா. இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து இளசுகளின் வட்டாரத்தில் படு பேமசான யாஷிகா பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று பட்டிதொட்டியெங்கும் பெரும் பிரபலமடைந்தார்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன்பே சில படங்களில் நடித்திருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சி தான் இவருக்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி தந்தது.  அந்நிகழ்ச்சிக்கு பின்னர் அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி வருகிறார். அந்தவகையில் தற்போது சீரியல்களில் நடிக்கவும் கமிட்டாகி இருக்கிறார். அதில் ஒரு எபிசோட்டிற்கு மற்றும் ஒன்றரை லட்சம் சம்பளமாக வழங்கப்படுகிறதாம்.

இந்நிலையில் சமூகவலைத்தளத்தில் ஆக்டீவாக இருந்து இணையவாசிகளை திருப்திப்படுத்த அவ்வப்போது கவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்தி வித வத்தமான போடோக்களை வெளியிட்டு வரும் யாஷிகா தற்ப்போது கவர்ச்சியை மூட்டைகட்டிவிட்டு பிரமாண்டமாக ஜொலிக்கும் உடையில் ராணி போல் தோன்றுகிறார். யாசஷிகாவை இப்படி பார்ப்பதெல்லாம் மிகவும் அரிது... என ரசிகர்கள் அனைவரும் வியப்பில் ஆழ்ந்துவிட்டனர்.