1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 1 மே 2021 (22:45 IST)

முதல் படத்திலேயே தேசிய விருது வென்றவர்....பிரபல இயக்குநர் புகழாரம்

சினிமா இயக்குநர் கே.வி.ஆனந்த் நேற்று மாரடைப்பால் காலமானார். அவருக்கு ஏராளமான திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் லேச, லேசா, சிறைச்சாலை போன்ற படங்களை இயக்கிய பிரியதர்ஷன் கே.வி.ஆனந்த் குறித்துப் புகழாரம் சூட்டியுள்ளார்.

நான் இயக்கிய தென்மாவின் கொம்பத்து என்ற படத்தில் கே.வி.ஆனந்தைமுதன் முதலாக ஒளிப்பதிவாளராக அறிமுகம் செய்தேன்.        

இப்படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய வேண்டுமென நினைத்தேன். அவர் மணிரத்னம் படத்தில் பிஸியாக இருந்ததால் இப்படத்திற்கு அவரது சீடர்களான ஜீவா மற்றும் கே.வி.ஆனந்த் இருவரின் கே.வி ஆனந்த்தை என்னிட்ம அனுப்பி வைத்தார். முதல் படத்திலேயே அவர் தேசிய விருது பெற்று,அவரது குருவையும் என்னையும் பெருமைப்படுத்திவிட்டார். பாலுமகேந்திராவும் அவரது ஒளிப்பதிவைப் பாராட்டினார் எனத் தெரிவித்துள்ளார்.