1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 9 டிசம்பர் 2020 (11:14 IST)

10 நாட்கள் ஷூட்டிங் நடத்தி படத்தை நிறுத்திய வெற்றிமாறன் – ஏன் தெரியுமா?

தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் வெற்றிமாறன். அவர் ஒரு படத்தின் ஷூட்டிங்கை பாதியிலேயே நிறுத்தியுள்ளார்.

தமிழ் சினிமாவுக்கு 2007 ஆம் ஆண்டு பொல்லாதவன் திரைப்படம் மூலம் அறிமுகமானார் வெற்றிமாறன். அதன் பின்னர் அவர் இயக்கிய ஆடுகளம், விசாரணை, வடசென்னை மற்றும் அசுரன் ஆகிய ஒவ்வொரு படங்களும் முக்கியமான படங்களாக அமைந்தன. அவர் மற்றும் நடிகர் தனுஷின் காம்போவில் உருவாகும் படங்கள் அனைத்தும் மிகப்பெரிய வெற்றியைப் பெறுகின்றன.

இந்நிலையில் ஆடுகளம் படத்துக்குப் பின் அவர் தனுஷ் மற்றும் பார்த்திபன் நடிப்பில் சூதாடி எனும் படத்தை இயக்க இருந்தார். அந்த படத்துக்காக 10 நாட்கள் ஷூட்டிங்கும் நடந்தது. ஆனால் ஆடுகளம் படத்தின் பாதிப்பு அந்த படத்தின் எடுக்கப்பட்ட காட்சிகளில் அதிகமாக இருப்பதாக தோன்றியதால் வெற்றிமாறன் அந்த படத்தை நிறுத்தி விட்டாராம். அதை இப்போது ஒரு நேர்காணலில் அவர் பகிர்ந்துகொண்டுள்ளார்.