ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 9 டிசம்பர் 2020 (10:54 IST)

வெங்கட் பிரபு வெளியிட்ட ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில் – சிம்பு ரசிகர்கள் உற்சாகம்!

மாநாடு படப்பிடிப்பு தளத்தில் சிம்புவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெங்கட்பிரபு பகிர்ந்துகொண்டுள்ளார்.

நடிகர் சிம்பு கொரோனா லாக்டவுனுக்கு முன்னர் வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்தில் கவனம் செலுத்தி வந்தார். ஆனால் கொரோனா பாதிப்புக்குப் பின் அவர சுசீந்தரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தில் நடித்து முடித்துவிட்டு இப்போது மாநாடு படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார். தற்போது பாண்டிச்சேரியில் அதன் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்னர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதையடுத்து வீசிய நிவர் புயலால் பாண்டிச்சேரி கடுமையாக பாதிக்கப்பட்டது. அதனால் அங்கு நடந்து கொண்டிருந்த மாநாடு படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. ஆனால் சிம்பு உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் சென்னை செல்லாமல் அங்கேயே தங்கி இருந்தனர். புயலுக்குப் பின் இயல்புநிலை திரும்பிய பின்னர் மீண்டும் படப்பிடிப்பை நடத்தி வருகிறார் இயக்குனர் வெங்கட்பிரபு.

இப்போது படப்பிடிப்பு தளத்தில் நடிகர் சிம்பு மற்றும் அரவிந்த் ஆகாஷ் ஆகியொருடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை இணையத்தில் பகிர அந்த புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.