1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 8 மே 2024 (16:09 IST)

அஜித்துக்காக புராணக் கதையை உருவாக்கிய இயக்குனர் விஷ்ணுவர்தன்!

அஜித்துக்கு பில்லா மற்றும் ஆரம்பம் ஆகிய இரண்டு வெற்றிப்படங்களைக் கொடுத்த விஷ்ணுவர்தன், மீண்டும் அஜித் பட வாய்ப்புக்காக காத்திருந்தார். சமீபத்தில் விக்னேஷ் சிவன் அஜித் 62 படத்தில் இருந்து நீக்கப்பட்ட போது அந்த படத்தை இயக்க விஷ்ணுவர்தனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்பட்டது. ஆனால் அந்த படத்தை மகிழ் திருமேனி விடாமுயற்சி படத்தை இப்போது இயக்கிவருகிறார்.

இந்நிலையில் விஷ்ணுவர்தன் தற்போது அதர்வாவின் தம்பி ஆகாஷ் நடிக்கும் புதிய படத்தை இயக்கி வருகிறார். அடுத்து அவர் பாலிவுட்டில் சல்மான் கான் நடிக்கும் படத்தை இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தை பிரபல இயக்குனர் கரண் ஜோஹரின் தர்மா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் விஷ்ணுவர்தன் சமீபத்தில் அளித்த பேட்டியில் “அஜித்துக்கு நான் புராணக் கால கதை ஒன்றை சொன்னேன். அந்த படத்தில் அவரை ஒரு ராஜா கதாபாத்திரத்தில் உருவாக்கியிருந்தேன். ஆயிரத்தில் ஒருவன் ஸ்டைலிலான ஒரு படம் அது. ஆனால் சில காரணங்களால் அந்த படம் அடுத்த கட்டத்துக்கு நகரவில்லை.” எனக் கூறியுள்ளார்.