1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 14 மே 2024 (15:12 IST)

இங்கிலாந்தில் தொடங்க இருந்த துப்பறிவாளன் 2 ஷூட்டிங் தள்ளிவைப்பு… காரணம் விஷால்தானா?

விஷால் நடிப்பில் மிஷ்கின் இயக்கிய ’துப்பறிவாளன் 2’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் திடீரென விஷால் மற்றும் மிஷ்கின் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு மிஷ்கின் படத்தில் இருந்து விலகினார். இதையடுத்து மீதிப் படத்தை விஷாலே இயக்குவார் என அறிவிக்கப்பட்டது.

துப்பறிவாளன் 2 வின் லண்டன் படப்பிடிப்பு ஜனவரி 2022 ல் தொடங்கும் என அறிவித்திருந்தார் விஷால். ஆனால் கொரோனா வைரஸ் பரவலால் அங்கு லாக்டவுன் அறிவிக்கப்பட்டதால் அப்போது நினைத்தபடி ஷூட்டிங் தொடங்கவில்லை. இந்நிலையில் இந்த படத்தை மே மாதம் லண்டனில் தொடங்க உள்ளதாக விஷால் அறிவித்திருந்தார்.

இதற்கான வேலைகள் தற்போது நடந்து வந்த நிலையில் இப்போது ஷூட்டிங் திடீரென நிறுத்தப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்குக் காரணம் படத்துக்கான பைனான்ஸ் கிடைக்காததுதான் என சொல்லப்படுகிறது. விஷாலின் ரத்னம் திரைப்படம் கடந்த மாதம் ரிலீஸாகி மோசமான வசூலைப் பெற்றது. அதனால் விஷால் படத்துக்கு பைனான்ஸ் தர யாரும் முன்வரவில்லை என்று சொல்லப்படுகிறது.