வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 22 ஜூலை 2020 (11:44 IST)

கிடப்பில் போடப்பட்ட மற்றொரு விக்ரம் படம்! இயக்குனர் அதிரடி முடிவு!

விக்ரம் நடிப்பில் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் உருவாக இருந்த மகாவீர் கர்ணா திரைப்படம் தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளது.

விக்ரம், மலையாள இயக்குனர் ஆர்.எஸ்.விமல் இயக்கும் மஹாவீர் கர்ணா படத்தில் நடிக்க சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒப்பந்தமானார். 300 கோடி ரூபாய் செலவில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப் படத்தில் விக்ரம் கர்ணனாக நடிக்கிறார். தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் நேரடியாகவும் மற்ற மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டும் இந்தப் படம் வெளியாக இருக்கிறது. விறுவிறுப்பாகத் தொடங்கிய முதல்கட்ட படப்பிடிப்பை அடுத்து இப்போது படப்பிடிப்பு இப்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதனால் விக்ரம் தனது கோப்ரா மற்றும் பொன்னியின் செல்வன் ஆகிய படங்களில் நடிக்க முடிவெடுத்தார். கர்ணா படத்தின் தாமதம் குறித்து தெரிவித்துள்ள படக்குழு ‘கரணா படம் கொஞ்சம் தாமதமாகியுள்ளது. படப்பிடிப்புத் தொடங்கினால் இடைநிற்றல் இல்லாமல் படத்தை முடிக்க வேண்டும் என விக்ரம் கூறியுள்ளார். அதனால் படப்பிடிப்பு குறித்து விரிவான தகவல்களை விக்ரமிடம் ஒப்படைக்க இருக்கிறார் இயக்குனர் விமல். அதன் பின்னர் படப்பிடிப்பு தொடங்கும்’ எனத் தெரிவித்துள்ளனர். ஆனால் ஒரு வருடத்துக்கும் மேலும் படப்பிடிப்பு நடப்பதற்கான எந்த முன்னேற்றமும் ஏற்படாததால் அந்த படத்தின் இயக்குனர் விமல் மற்றொரு படத்தை இயக்க சென்றுள்ளார்.

ஏற்கனவே விக்ரம் நடித்த துருவ நட்சத்திரம் திரைப்படம் பெரும்பாலான படப்பிடிப்பு பணிகள் முடிந்து ரிலிஸாகாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.