வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : சனி, 26 செப்டம்பர் 2020 (18:33 IST)

ஷூட்டிங் ஸ்பாட்டில் எஸ்.பி.பிக்கு இறுதி அஞ்சலி செலுத்திய விஜய்சேதுபதி!

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் உடல் நலக்குறைவால் நேற்று பிற்பகல் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கோடிக்கணக்கான ரசிகர்களின் நெஞ்சில் இடியாய் விழுந்தது.கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்த அவர் கொரோனா சரியான பின்னரும் நேற்று ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் அவர் உயிர் பிரிந்ததை எண்ணி அனைவரும் மிகுந்த வேதனை அடைந்துவிட்டனர்.

இதையடுத்து தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டிற்கு எஸ்.பி பாலசுப்ரமணியம் உடல் நேற்று இரவே கொண்டு செல்லப்பட்டது.  அங்கு 10 மணி வரை பொதுமக்கள் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டு அதன் பின்னர் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் 11 மணிக்கு அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

எஸ்பி பாலசுப்பிரமணியம் மறைவு குறித்து இரங்கல் தெரிவிக்காத பிரபலங்களே இல்லை. விஜய் , ரஜினி உள்ளிட்டோர் அவரது இறுதிச்சடங்கில் நேரடியாக கலந்துக்கொண்டு ஆன்மா சாந்தியடைய வேண்டினர். அந்தவகையில் நடிகர் விஜய் சேதுபதி ஜெய்ப்பூரில் படத்தின் ஷூட்டிங்கில் இருந்ததால் அவரால் இதில் பங்கு கொள்ளமுடியவில்லை. எனவே அங்கிருந்தபடியே படக்குழுவினருடன் அவரது புகைப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதில் நடிகை டாப்ஸீ, ராதிகா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.