1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 1 ஜூலை 2024 (11:53 IST)

விஷால், ஜெயம் ரவி விலகல்… விஜய் சேதுபதி பாண்டிராஜ் காம்பினேஷன் உருவான பின்னணி என்ன?

இயக்குனர் பாண்டிராஜ் தமிழ் சினிமாவின் முக்கியமான கமர்ஷியல் இயக்குனர்களில் ஒருவர். பசங்க படத்தின் மூலம் அறிமுகமான அவர் அடுத்தடுத்து இயக்கிய கடைகுட்டி சிங்கம், நம்ம வீட்டுப் பிள்ளை போன்ற திரைப்படங்கள் பெரியளவில் வெற்றியைப் பெற்றன. கடைசியாக அவர் இயக்கிய எதற்கும் துணிந்தவன் திரைப்படம் 2022 ஆம் ஆண்டு ரிலீஸாகி தோல்வி படமாக அமைந்தது.

இதனால் பாண்டிராஜ் தன்னுடைய அடுத்த படத்தின் திரைக்கதையௌ உருவாக்க ஒரு இடைவெளி எடுத்துக்கொண்டார். திரைக்கதையை எழுதி முடித்த பாண்டிராஜ், விஷால் மற்றும் ஜெயம் ரவி ஆகியோரிடம் அவர் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் ஆனால் இருவருமே கைவிரித்து விட்டதாகவும் சொல்லப்பட்டது.

இதற்குக் காரணம் இந்த படம் அதிக செலவு கொண்ட ஒரு படமாம். ஆனால், விஷால் மற்றும் ஜெயம் ரவி ஆகியோரின் சம்பளத்தைக் கணக்கில் கொண்டு பட்ஜெட் போட்டால் படத்தை எடுத்து முடித்து லாபம் பார்க்கமுடியாது எனத் தயாரிப்பு நிறுவனம், அவர்களின் சம்பளத்தைக் குறைக்க சொல்லிக் கேட்டதாம். ஆனால் அவர்கள் அதற்கு சம்மதிக்கவில்லையாம்.

அதன் பின்னர்தான் இந்த படத்தில் விஜய் சேதுபதி வந்தாராம். படத்தின் கதையைக் கேட்டு தன்னுடைய சம்பளத்தை விஜய் சேதுபதி குறைத்துக் கொண்டுள்ளாராம். அதனால்தான் இப்போது அந்த படம் உறுதியாகி முதல் கட்ட வேலைகள் நடந்து வருகிறதாம்.