1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 10 பிப்ரவரி 2022 (17:18 IST)

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன்… தயாரிக்கும் முன்னணி நிறுவனம்!

இயக்குனர் வெற்றிமாறன் மாநாடு படத்தின் வெற்றிக்குப் பிறகு முன்னணி நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் கவனம் ஈர்த்த இயக்குனர் ஆகியுள்ளார்.

இயக்குனர் வெங்கட்பிரபு மங்காத்தா திரைப்படத்துக்கு பிறகு 10 ஆண்டுகள் கழித்து மாநாடு திரைப்படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ளார். இதனால் அவரின் அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அடுத்து அவர் ஏற்கனவே இயக்கியுள்ள மன்மதலீலை படத்தின் ரிலீஸ் வேலைகளில் இறங்கியுள்ளார். இதையடுத்து கிச்சா சுதீப் நடிக்கும் படத்தை பேன் இந்தியன் படமாக இயக்க உள்ளார்.

இந்நிலையில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ஒரு படத்தையும் இயக்க பேச்சுவார்த்தை நடத்துவதாக சொலல்ப்படுகிறது. இருவரும் தாங்கள் ஒப்பந்தமான படங்களை முடித்துவிட்டு, பின்னர் இந்த படத்துக்காக இணைவார்கள் என சொல்லப்படுகிறது.