வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 19 ஜூலை 2019 (23:29 IST)

மாநாடு திடீர் நிறுத்தம்: வெப் சீரீஸுக்கு போகிறார் வெங்கட் பிரபு

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாக இருப்பதாக 'மாநாடு' என்ற திரைப்படம் அறிவிக்கப்பட்டது. இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற உள்ளதாகவும், அதற்கான ஏற்பாடுகளையும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாராக வைத்திருந்தார் என்றும், இதனால் எந்த நேரத்திலும் இந்த படத்தின் படக்குழுவினர் மலேசியா செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது
 
இந்த நிலையில் இந்த படத்தில் நடிக்க சிம்பு ஒரு சில நிபந்தனைகளை விதித்ததாகவும், சிம்புவை இயக்க வெங்கட் பிரபு சில நிபந்தனைகள் விதித்ததாகவும் இரண்டு பேர்களின் நிபந்தனைகளை கேட்ட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அம்மன் நொந்து போனதாகவும் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் சிம்பு கன்னட ரீமேக் படம் ஒன்றில் படப்பிடிப்பில் கலந்து கொள்ள சென்று விட்டா.ர் அதனால் வெறுத்துப்போன வெங்கட்பிரபுவும் வெப் சீரிஸ் ஒன்றை இயக்க திட்டமிட்டுள்ளார். வெப்சீரீஸ் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது 
 
எனவே சிம்புவும் வெங்கட்பிரபுவும் ஆளுக்கு ஒரு பக்கம் சென்றுவிட்டதால் 'மாநாடு' திரைப்படம் கிட்டத்தட்ட கைவிடப்பட்டதாக கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த படத்திற்காக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஒரு சில கோடிகளை செலவு செய்துள்ளார். அதில் சிம்புவின் சம்பளமும் அடங்கும்.  தற்போது அவர் அந்த பணத்தை எப்படி மீட்க போகிறார் என்பதே கேள்விக்குறியாக உள்ளது