1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 12 ஆகஸ்ட் 2022 (16:27 IST)

கல்வி, வேலைவாய்ப்பை கொடுங்கள், மக்கள் சொல்லாமலேயே தேசியக்கொடி ஏற்றுவார்கள்: வைரமுத்து

vairmuthu
மக்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பை கொடுத்தால் அரசு சொல்லாமலேயே மக்கள் தாங்களாகவே தேசிய கொடி ஏற்றுவார்கள் என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார் 
 
சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தியாவில் உள்ள ஒவ்வொருவரும் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளார் 
 
இந்த நிலையில் இது குறித்து கவிஞர் வைரமுத்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தில் மட்டும் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினால் போதாது. 365 நாளும் தேசியக்கொடிக்கு மக்கள் மரியாதை செலுத்தவேண்டும். 
 
இல்லந்தோறும் தேசியக் கொடியை ஏற்றும் திட்டம் மக்களின் கல்விக்கும் பொருளாதாரத்திற்கும் சம்பந்தப்பட்டதாக இருக்கிறது. 340 கோடி மக்களுக்கு கல்வியையும் பொருளாதாரத்தையும் வேலைவாய்ப்பையும் இந்த நாடு வளர்த்துக் கொடுத்தால் நீங்கள் கேட்டு கொள்ளாமலேயே ஒவ்வொரு இந்திய குடிமகனும் வீட்டில் எல்லா நாளும் தேசியக்கொடி ஏற்றல் என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்