1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 6 செப்டம்பர் 2022 (09:39 IST)

சேத்துமான் இயக்குனரின் அடுத்த படத்தில் உறியடி விஜயகுமார்… மின்னல் வேகத்தில் முடிந்த படப்பிடிப்பு

கடந்த 2016ம் ஆண்டு வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றப்படம் உறியடி. இந்த படத்தை இயக்கி, ஹீரோவாக நடித்த விஜய் குமார் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அதையடுத்து அவர் இயக்கிய படம்  "உறியடி 2". இதனை நடிகர் சூர்யா தனது 2டி நிறுவனத்தின் சார்பில் தயாரித்தார். இப்படமும் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் சூர்யா நடித்த ‘சூரரைப் போற்று’ திரைப்படத்துக்கு வசனம் எழுதினார்.

இதையடுத்து இப்போது விஜயகுமார் அடுத்து சேத்துமான் படத்தின் இயக்குனர் தமிழ் இயக்கும் புதிய படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.. இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் கடந்த ஜூலை மாதம் தொடங்கியது. கிராமத்து பின்னணியில் அரசியல் கதையாக இந்த திரைப்படம் உருவாக உள்ளதாக சொல்லப்படுகிறது. ஒரே கட்டமாக தொடர்ந்து 60 நாட்கள் இந்த படத்தின் படப்பிடிப்பு நடக்க உள்ளதாக சொல்லப்பட்ட நிலையில் தற்போது படப்பிடிப்பு முடிந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.