1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 18 ஆகஸ்ட் 2019 (14:52 IST)

உணர்சிகளை கட்டுப்படுத்த வேண்டும் – யாரை சொல்கிறார் பிக்பாஸ்?

இன்று இரவு ஒளிபரப்பப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் யார் வெளியேற்றப்படுவார்கள் என ஆர்வத்துடன் பலரும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். ஆனால் கமலோ இன்று வெளியேற்றம் இருக்காது என்பது போல ப்ரோமோவில் பேசிவருகிறார்.

ஹ்வுஸ்மேட்ஸ் உடனான தகறாரில் மதுமிதா உணர்ச்சிவசப்பட்டு கையை வெட்டிக் கொண்டதாக கூறப்படுகிறது. அதனால் அவர் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். ஒவ்வொரு வாரமும் ஒருவர் வெளியேற்றப்படுவது வழக்கம். இந்நிலையில் இந்த வாரம் ஒருவர் வெளியேற்றப்பட இருந்த நிலையில் மதுமிதா வெளியேறியுள்ளதால் எவிக்‌ஷன் இந்த வாரம் இருக்காது என பேசிக் கொள்ளப்படுகிறது.

ப்ரோமோவில் பேசிய கமல் “உணர்ச்சிகளை கட்டுப்படுத்த கற்றுக்கொள்ள வேண்டும்” என்று பேசினார். அப்படி சொல்லும்போது எதிரே கவினும், லாஸ்லியாவும் அமர்ந்திருந்தாலும், அவர் மதுமிதா செய்த செயலைதான் குறிப்பிட்டு சொல்கிறார் என தெரிகிறது. ஆனாலும் இறுதியாக எவிக்‌ஷன் உண்டு என்பது போலவும் பேசுகிறார். இதனால் குழப்பத்தோடே இன்றைய பிக்பாஸை பார்வையாளர்கள் எதிர்கொள்ளவிருக்கிறார்கள்.