1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: திங்கள், 19 அக்டோபர் 2020 (16:35 IST)

மக்களின் உணர்வுகளை மதிக்கவில்லை: விஜய்சேதுபதி முடிவுக்கு திருமாவளவன் கண்டனம்!

தனது வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிப்பதால் விஜய்சேதுபதியின் திரையுலக வாழ்க்கையில் பிரச்சனை ஏற்படும் என கருதி இந்த படத்தில் இருந்து அவரை விலகிக் கொள்ளுமாறு சற்று முன்னர் முத்தையா முரளிதரன் கடிதம் ஒன்றை எழுதி இருந்தார் என்பதையும் அதற்கு விஜய் சேதுபதி ’நன்றி வணக்கம்’ என்று தெரிவித்து இருந்தார் என்ற செய்தியையும் பார்த்தோம் 
 
மேலும் முரளிதரன் கேட்டு கொண்டும் விஜய்சேதுபதி இந்த படத்தில் இருந்து பின்வாங்க மாட்டேன் என்று கூறியுள்ளார் என்பதும், ஆனால் ஒருசில ஊடகங்களில் விஜய்சேதுபதி இந்த படத்தில் இருந்து விலகிவிட்டதாக செய்தி வெளியிட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் அவர்கள் விஜய்சேதுபதிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். முரளிதரன் வாழ்கை வரலாறு படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகியது ஆறுதல் தான் என்றாலும் முரளிதரன் கோரிக்கையை ஏற்று அவர் விலகி உள்ளாரே தவிர மக்களின் உணர்வுகளை மதிக்க வில்லை என்று கூறியுள்ளார்