1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 26 நவம்பர் 2021 (23:00 IST)

’மாநாடு’ படத்தின் கதை முதலில் விஜய்யிடம் கூறப்பட்டதாக தகவல்!

நடிகர் சிம்பு-  எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் இன்று வெளியாகி வெற்றி பெற்றுள்ள மாநாடு படத்தை தியேட்டரில் ரசிகர்களுடன் அமர்ந்து பார்த்து ரசித்தார் எஸ்.ஏ.,சந்திரசேகர்.

 இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கத்தில், நடிகர் சிம்பு-  எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் நேற்று வெளியாகி வெற்றி பெற்றுள்ள  படம் மாநாடு.

இப்படத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் முதல்வராக நடித்துள்ளார். ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இப்படம் முதல் நாள் வசூலில் சாதனை படைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில்,மாநாடு திரைப்படத்தின் ஸ்கிரிப்ட் முதலில் நடிகர் விஜய்யிடம் கூறப்பட்டதாம். ஆனால் அதைப்படித்துப் பார்த்த பிறகு அவர் வேண்டம் என நிராகரித்ததாக தகவல்  வெளியாகிறது.

இதையடுத்து, இயக்குநர் வெங்கட்பிரபு சிம்பு- எஸ்.ஜே.சூர்யாவை வைத்து சிறப்பாக எடுத்து சூப்பர் ஹிட் படமாக கொடுத்துவிட்டார்.