1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 4 ஏப்ரல் 2023 (18:16 IST)

''புஷ்பா -2 பட காட்சிகளை அழிக்க இயக்குனர் திட்டம்?'' ரசிகர்கள் அதிர்ச்சி

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில், சுகுமார் இயக்கத்தில், கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான படம் புஷ்பா 1. பான் இந்தியா படமாக வெளியாகி உலகம் முழுவதும்  ரூ.350 கோடிக்கு மேல் வசூலாகி சாதனை படைத்தது.

இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் உருவாகி ஜிட்டானதால், இப்படத்தின் 2வது பாகம் தயாராகி வந்தது.

கடந்த ஆகஸ்ட் மாதம் இப்பட ஷூட்டிங் தொடக்கப்பட்ட நிலையில், விறுவிறுப்பாக இந்தன் படப்பிடிப்புகள் நடந்து வந்தன. இந்த நிலையில், இதுவரை எடுத்த காட்சிகள் இயக்குனருக்கு திருப்தி அளிக்காததால், படப்பிடிப்பு திடீரென்று ரத்து செய்யப்பட்டதாகவும், இதுவரை எடுத்த காட்சிகளை அழிக்க இயக்குனர் யோசித்து வருவதாக தகவல் வெளியாகிறது. ஆனால், இதுபற்றி அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.

மேலும், வரு ஏப்ரல் 8 ஆம் தேதி அல்லு அர்ஜூன் பிறந்த நாளை முன்னிட்டு, புஷ்பா 2 பட டீசர் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும், ஆர்.ஆர்.ஆர், கேஜிஎஃப்  படத்தைப் போன்று இப்படத்தில் ஒரு பாலிவுட் நடிகரை நடிக்கவைக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.