வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 5 அக்டோபர் 2022 (15:54 IST)

தனி ஒருவன் பார்ட் 2 கைவிடப்பட்டதா?... இயக்குனர் மோகன் ராஜாவே சொன்ன பதில்!

தனி ஒருவன் திரைப்படம் ஜெயம் ரவியின் திரை வாழ்க்கையில் முக்கியமான வெற்றிப் படமாக அமைந்தது.

'ஜெயம்' படம் மூலம் தமிழில் இயக்குனராக அறிமுகமான ராஜா தொடர்ச்சியாக ரீமேக் படங்களையே இயக்கி, ரீமேக் ராஜா என்ற பெயரை பெற்றார். ஆனால் அந்த கேலிகளை உடைத்து முன்னணி இயக்குனராக அவர் தன்னை மாற்றிக்கொண்டது தனி ஒருவன் படத்தின் மூலம்தான். ஜெயம்ரவியின் சினிமா வாழ்க்கையிலும் அந்தப் படம் முக்கியமானதொரு படமாக அமைந்தது.

இந்நிலையில் இந்த படம் இப்போது வெளியாகி 7 ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில் விரைவில் இரண்டாம் பாகம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இதுகுறித்து ஜெயம் ரவி மற்றும் மோகன் ராஜா ஆகிய இருவருமே அவ்வப்போது தகவல்களை வெளியிட்டு வந்தனர்.

இந்நிலையில் இப்போது சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது மோகன் ராஜா ‘தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் கைவிடப்பட்டது’ எனக் கூறியுள்ளாராம். இரண்டாம் பாகத்தைத் தொடங்குவதில் தயாரிப்பு தரப்புக்கும் இயக்குனருக்கும் சுமூகமான உறவு இல்லை என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.