ஞாயிறு, 29 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 29 நவம்பர் 2023 (09:56 IST)

இனி டோலிவுட்தான் இந்திய சினிமாவை ஆளப் போகிறது… ரன்பீர் கபூர் முன் பேசிய அமைச்சர்!

விஜய் தேவரகொண்டா நடித்த ’அர்ஜுன் ரெட்டி’ என்ற படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா அதே படத்தை இந்தியில் ஷாகித் கபூர் நடிப்பில் ரீமேக் செய்து அதிலும் வெற்றி பெற்றார். இதையடுத்து அவரின் அடுத்த படமான அனிமல் படத்தில் ரன்பீர் கபூர் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

இந்த படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்து முடித்துள்ளார். மற்ற முக்கியக் கதாபாத்திரங்களில் அனில் கபூர் மற்றும் பாபி தியோல் ஆகியோர் நடித்துள்ளனர். டிசம்பர் மாதத்தில் இந்த படம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில் இப்போது இந்த படத்தின் மூன்று மணிநேரம் 21 நிமிடம் இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடந்தது. அதில் இயக்குனர் ராஜமௌலி மற்றும் நடிகர் மகேஷ் பாபு ஆகியோர் கலந்துகொண்டு படக்குழுவினரை பாராட்டி பேசினர். இந்த நிகழ்ச்சியில் பேசிய தெலங்கானாவை சேர்ந்த அமைச்சர் சமக்குரா மல்லா ரெட்டி “இனி தெலுங்கு சினிமாதான் இந்திய சினிமாவை ஆளப் போகிறது. அதனால் ரன்பீர் கபூர் மும்பையை காலி செய்துவிட்டு ஐதராபாத்துக்கு குடிபெயர்ந்து விட வேண்டும்” என பேசினார். அவரின் இந்த பேச்சைக் கேட்டு ரன்பீர் கபூர் தர்மசங்கடமான சூழலுக்கு ஆளானார்.