1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauveri Manickam (Murugan)
Last Modified: புதன், 16 ஆகஸ்ட் 2017 (11:22 IST)

மருத்துவ ஊழல்களை அம்பலப்படுத்தும் சுசீந்திரன்...

சுசீந்திரன் இயக்கிவரும் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படம், மருத்துவத் துறையின் ஊழல்களை அம்பலப்படுத்தும் வகையில் எடுக்கப்பட்டு வருகிறது. 


 

 
‘மாவீரன் கிட்டு’ படத்துக்குப் பிறகு சுசீந்திரன் இயக்கிவரும் படம் ‘அறம் செய்து பழகு’. விக்ராந்த், சுந்தீப் கிஷண் இருவரும் ஹீரோவாக நடித்துவரும் இந்தப் படம், தமிழ் – தெலுங்கில் உருவாகிறது. மதுரையைப் பின்னணியாகக் கொண்ட இந்தப் படம், மருத்துவத் துறையின் கறைகளை வெளிப்படுத்தும் வகையில் எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், திடீரென இந்தப் படத்தின் தலைப்பை ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ என மாற்றியுள்ளார் சுசீந்திரன். இந்தப் படத்துக்கு டி.இமான் இசை அமைக்கிறார்.