1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. Abishan jeevinth proud moment with Rajinikanth

நான் சினிமாவுக்கு வந்த காரணம் முழுமையடைந்ததாக உணர்கிறேன்… ரஜினி பாராட்டால் நெகிழ்ந்த அபிஷன் ஜீவிந்த்!

சசிகுமார்
மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ‘குட்னைட்’ மற்றும் ‘லவ்வர்’ ஆகிய படங்களுக்கு அடுத்தப் படமாக ’டூரிஸ்ட் பேமிலி’ படம் கடந்த மே 1 ஆம் தேதி ரிலீஸானது. படத்தை அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்க, சிம்ரன், யோகி பாபு மற்றும் சசிகுமார் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஷான் ரோல்டன் இசையமைத்திருந்தார்.

இந்த படம் வெளியாகி திரையரங்குகள் மூலமாக மட்டும் சுமார் 75 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனைப் படைத்தது. தற்போது ஓடிடியில் வெளியாகி ஸ்ட்ரீம் ஆகிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தின் இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் தற்போது தமிழ் சினிமாவின் கவனிக்கப்படும் இயக்குனர் ஆகியுள்ளார். இந்த படத்தை ஏற்கனவே பாராட்டிய ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் அபிஷனை அழைத்து நேரில் பாராட்டியுள்ளார்.

இது சம்மந்தமாக அபிஷன் ரஜினியோடு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு “நான் சினிமாவுக்கு வந்த காரணம் முழுமையடைந்ததாக இப்போது உணர்கிறேன்.  அவர் என்னை அழைத்த விதமும், என்னைக் கட்டியணைத்த விதமும்- எனக்குப் புல்லரிப்பைக் கொடுத்தது.  அவரின் ஒரே ஒரு சிரிப்பு என்னுடையக் குழந்தைக் கனவுகளை எல்லாம் நிறைவேற்றிய உணர்வைக் கொடுத்துள்ளது. இதைவிட பெரிய உத்வேகத்தையோ, ஆசிர்வாதத்தையோக் கேட்க முடியாது. லவ் யூ தலைவா” என நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார்.
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
50 கோடி ரூபாய் வசூலுக்கே திணறும் ‘தக் லைஃப்’… விடுமுறை நாட்களில் கூட சுணக்கம்!