1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: ஞாயிறு, 3 ஜனவரி 2021 (11:25 IST)

இன்னும் சில வருடத்தில் இந்தியாவின் நம்பர் ஒன் நடிகர் சிம்பு தான்: சுசீந்திரன்

இன்னும் ஒரு சில வருடத்தில் இந்தியாவின் நம்பர் ஒன் நடிகராக சிம்பு மாறுவார் என்று இயக்குனர் சுசீந்திரன் தெரிவித்துள்ளார். சிம்பு நடித்த ஈஸ்வரன் திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று சென்னை ஆல்பர்ட் திரையரங்கில் நடந்தது. இந்த விழாவில் சிம்பு, நிதி அகர்வால், பாரதிராஜா, சுசீந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் இயக்குனர் சுசீந்திரன் பேசியதாவது
 
சிம்புவைப் பற்றி எங்களைவிட ரசிகர்களாகிய உங்களுக்குத்தான் அதிகமாக தெரியும். ஏனென்றால் எங்களைவிட அதிகமாக நீங்கள்தான் அவரை அதிகமாக பின்தொடருகிறீர்கள். ஆனால், சிம்புவுடன் நான் பழகும்போது தான் தெரிந்தது, அவருக்கு ஏன் இவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று. இன்னும் சில வருடங்களில் நடிப்பில் இந்தியாவிலேயே முதல் இடத்திற்கு வருவார் என்பதில் ஐயமில்லை. இந்த வருடத்திலேயே அவர் நடிப்பில் 3 படங்கள் வெளியாகும்.
 
சிம்புவை வைத்து இயக்க போகிறேன் என்றதும் பல தயாரிப்பாளர்கள் எனக்கு போன் செய்து வேண்டாம் என்றார்கள். ஆனால், சிம்பு மற்றவர்கள் சொல்வதற்கு காது கொடுக்காதீர்கள். என் பின்னால் நீங்கள் மட்டும் இருங்கள், படப்பிடிப்பிற்கு 9ஆம் தேதி அன்று நான் இருப்பேன் என்றார். அதேபோல், நானும் இயக்கினேன். ஒரு மாதத்திலேயே படப்பிடிப்பு முடிந்து பொங்கலுக்கு வெளியிடுகிறோம்.
 
இப்படத்தில் பணியாற்றிய நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. சிலர் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்கள். அவர்களையெல்லாம் ‘ஈஸ்வரன்’ படத்தின் வெற்றி விழாவில் சந்திக்கிறேன். இவ்வாறு இயக்குனர் சுசீந்திரன் பேசினார்