1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 26 மே 2022 (14:29 IST)

மீண்டும் ஷூட்டிங் செல்ல காத்திருக்கிறேன்… நடிகர் சூர்யா டிவீட்… வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி!

நடிகர் சூர்யாவுக்கும் இயக்குனர் பாலாவுக்கும் இடையே படப்பிடிப்பின் போது கருத்து வேறுபாடு எழுந்ததாக தகவல்கள் வெளியாகின

இயக்குனர் பாலா இயக்கத்தில் கடைசியாக வெளியான திரைப்படம் நாச்சியார். அதன் பிறகு அவர் இயக்கிய வர்மா திரைப்படம் தயாரிப்பாளரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த படத்தைக் கிடப்பில் போட்டுவிட்டு வேறொரு இயக்குனரை வைத்து முழுப் படத்தையும் எடுத்து ரிலீஸ் செய்தனர். இதையடுத்து இயக்குனர் பாலாவின் அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு இருந்த நிலையில் சூர்யா, அவர் இயக்கத்தில் நடித்து அந்த படத்தை தயாரிக்கவும் உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து 34 நாட்கள் கன்னியாகுமரியில் முதல் கட்ட படப்பிடிப்பு நடந்தது. இந்நிலையில் படப்பிடிப்புத் தளத்தில் சூர்யாவுக்கும் பாலாவுக்கும் இடையே மோதல் எழுந்து, சூர்யா அங்கிருந்து வெளியேறியதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அது உண்மையில்லை என்று தயாரிப்பு தரப்பு விளக்கம் அளித்தது.

ஆனாலும் தொடர்ந்து அதுபோன்ற வதந்திகள் பரவி வந்த நிலையில் இப்போது சூர்யா, இயக்குனர் பாலாவோடு இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து “மீண்டும் படப்பிடிப்புத் தளத்துக்கு செல்ல ஆர்வமாக இருக்கிறேன்” என்று கூறியுள்ளார். இந்த டிவீட் இப்போது இணையத்தில் கவனத்தைப் பெற்று வருகிறது.