1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 13 ஜூலை 2022 (16:09 IST)

பாலா- சூர்யா கூட்டணியின் ‘வணங்கான்’… ஒளிப்பதிவாளர் விலகலா? பரபரப்பு தகவல்!

பாலா சூர்யா இணையும் படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரியில் சமீபத்தில் 35 நாட்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் பாலா இயக்கத்தில் கடைசியாக வெளியான திரைப்படம் நாச்சியார். அதன் பிறகு அவர் இயக்கிய வர்மா திரைப்படம் தயாரிப்பாளரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த படத்தைக் கிடப்பில் போட்டுவிட்டு வேறொரு இயக்குனரை வைத்து முழுப் படத்தையும் எடுத்து ரிலீஸ் செய்தனர். இதையடுத்து இயக்குனர் பாலாவின் அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு இருந்த நிலையில் சூர்யா, அவர் இயக்கத்தில் நடித்து அந்த படத்தை தயாரிக்கவும் உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து 34 நாட்கள் கன்னியாகுமரியில் முதல் கட்ட படப்பிடிப்பு நடந்தது. இந்நிலையில் படப்பிடிப்புத் தளத்தில் சூர்யாவுக்கும் பாலாவுக்கும் இடையே மோதல் எழுந்து, சூர்யா அங்கிருந்து வெளியேறியதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அது உண்மையில்லை என்று தயாரிப்பு தரப்பு விளக்கம் அளித்தது.

இந்நிலையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்நிலையில் இப்போது படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்த ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியம் பாதியிலேயே படத்தில் இருந்து விலகியுள்ளதாக சொல்லப்படுகிறது. அவருக்குப் பதிலாக ஒளிப்பதிவாளர் ஓம்பிரகாஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.