வியாழன், 20 மார்ச் 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 20 மார்ச் 2025 (14:51 IST)

திருமணத்துக்குப் பிறகு நடிக்கக் கூடாது என சூர்யா குடும்பத்தினர் தடுத்தார்களா? –ஜோதிகா பதில்!

தமிழில் பிரபல கதாநாயகியாக இருந்த ஜோதிகா, சூர்யாவை திருமணம் செய்துகொண்ட பிறகு, சில ஆண்டுகள் சினிமாவில் நடிக்காமல் விலகி இருந்தார். ஆனால் அதன் பின்னர் 36 வயதினிலே படத்தின் மூலம் திரும்பவும் நடிக்க வந்த அவர் பல படங்களில் நடித்தார். சில மாதங்களுக்கு முன்னர் மலையாளத்தில் மம்மூட்டி ஜோடியாக காதல் என்ற திரைப்படத்தில் நடித்தார். அந்த படம் அவரின் நடிப்புக்கு பாராட்டுகளைப் பெற்று தந்தது.

இதையடுத்து பாலிவுட்டில் ஷைத்தான் என்ற படத்தில் அஜய் தேவ்கன் மற்றும் மாதவன் ஆகியோரோடு இணைந்து நடித்தார். இந்த படம் கடந்த மாதம் வெளியாகி நல்ல வெற்றியைப் பெற்றது. இதையடுத்து அவர் தொழிலதிபர் ஸ்ரீகாந்த் போலாவின் பயோபிக் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் அவர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘டப்பா கார்டெல்’ என்ற தொடர் ரிலீஸானது. தொடர்ந்து இந்தி சினிமாவில் அவர் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த நேர்காணலில் திருமணத்துக்குப் பிறகு ஏன் சினிமாவில் இடைவெளி என்பதற்குப் பதிலளித்துள்ளார். அதில் “திருமணத்துக்குப் பிறகு நான் நடிப்பதை சூர்யாவும் அவர் குடும்பத்தினரும் விரும்பவில்லை என பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது உண்மை இல்லை. குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்த விரும்பியதால் நான்தான் அந்த முடிவை எடுத்தேன். அதனால் சூர்யாவோ, அவரது குடும்பத்தினரோக் காரணம் இல்லை” எனக் கூறியுள்ளார்.