ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 21 ஜனவரி 2019 (12:46 IST)

சூர்யா மற்றும் ஹரி கூட்டணியோடு கைகோர்த்த ஏ.வி.எம். !

படத்தயாரிப்பில் இருந்து ஒதுங்கியிருந்த மிகப் பழமையான ஏ.வி.எம். நிறுவனம் தற்போது மீண்டும் படத்தயாரிப்பில் இறங்க இருக்கிறது.

தமிழ் சினிமா ஸ்டுடியோக்களின் காலமாக இருந்த பொழுதில் இருந்தே ஏ.வி.எம். நிறுவனம் படத்தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. ஏ.வி,எம். மின் சக ஸ்டுடியோக்களான ஜெமினி, விஜயா போன்ற ஸ்டுடீயோக்கள் எல்லாம் எப்போதோ மூடு விழாக்கள் கண்டுவிட்ட போதிலும் ஏ.வி. எம். ஸ்டுடியோ இன்னும் தாக்குப் பிடித்து வருகிறது.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாகப் படங்களைத் தயாரிக்காமல் அரங்கு வாடகை, பாடல் ரெக்கார்டிங் போன்ற பணிகளை மட்டுமே செய்து வந்தது. அவர்கள் படத்தயாரிப்பில் இருந்து ஒதுங்கி இருந்ததற்குக் காரணமாக தற்போதைய வியாபாரப் போட்டியில் தங்களால் போட்டி போட முடியவில்லை என்பதும் ஒருக் காரணம்.

ஆனால் இப்போது மீண்டும் படத்தயாரிப்பில் இறங்க உள்ளனர். அதுவும் சாதாரணமாக இல்லாமல் பெரிய ஹீரோ மற்றும் பெரிய இயக்குனருடன் கைகோர்க்க உள்ளனர். வெற்றிக் கூட்டணியான சூர்யா மற்றும் ஹரி காம்போவில் ஒருப் படத்தை ஏ.வி.எம். தயாரிக்க உள்ளது. இப்படத்திற்கு யானை எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் ஏ.வி.எம் நிறுவனத்தில்  இருந்து வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே சூர்யா ஏ.வி,எம் கூட்டணியில் உருவான அயன் படம் மிகப்பெரிய ஹிட்டானது என்பது குறிப்பிடத்தக்கது.