1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 2 பிப்ரவரி 2020 (15:23 IST)

ஹிப் ஹாப் ஆதியைப் பிரிந்த சுந்தர் சி – இதுதான் காரணமா ?

வரிசையாக ஹிப் ஹாப் ஆதியோடு பயணித்து வந்த சுந்தர் சி தற்போது தனது அரண்மனை 3 படத்துக்காக புதிய இசையமைப்பாளராகத் தேடி வருவதாக சொல்லப்படுகிறது.

சுந்தர் சி எப்போதும் ஒரு இசையமைப்பாளர் செட் ஆகிவிட்டால் ஒன்றுக்கும் மேற்பட்ட படங்களில் அவர்களைப் பயன்படுத்திக் கொள்வார். சிற்பி, யுவன் ஷங்கர் ராஜா, இமான் என அந்த வரிசையில் கடைசியாக ஹிப் ஹாப் ஆதியோடு பல படங்களில் பணிபுரிந்தார்.

அதோடு நிற்காமல் ஆதியை ஹீரோவாக வைத்து மீசைய முறுக்கு, நட்பே துணை மற்றும் நான் சிரித்தால் ஆகிய படங்களைத் தயாரித்தார். இதில் கடைசியாக உருவான நான் சிரித்தால் படத்தின் படப்பிடிப்பின் போது சுந்தர் சிக்கும் ஆதிக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்ததாக சொல்லப்படுகிறது.

இதனால்தான் அடுத்ததாக இயக்க இருக்கும் அரண்மனை 3 படத்தில் இருந்து ஹிப் ஹாப் ஆதியைத் தூக்கிவிட்டு வேறொரு இசையமைப்பாளரை ஒப்பந்தம் செய்ய இருக்கிறார் சுந்தர் சி.