1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 4 செப்டம்பர் 2020 (14:06 IST)

எஸ் பி பிக்காக மருத்துவமனையில் ஆன்மீக சொற்பொழிவு!

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவரும் பாடகர் எஸ்பிபி க்காக மருத்துவமனையில் ஆன்மீக சொற்பொழிவுகள் ஒளிபரப்பப் படுவதாக சொல்லப்படுகிறது.

பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கடந்த ஆகஸ்ட்  5 ஆம் தேதி முதல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி முதல் மோசமானதை அடுத்து அவருக்கு வெண்ட்டிலேட்டர் மற்றும் எக்மோ ஆகிய கருவிகள் மூலமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதையடுத்து தினமும் எஸ் பி பி உடல்நிலை பற்றி அவர் மகன் எஸ் பி சரண் தெரிவித்து வந்தார்.

இதையடுத்து இப்போது எஸ் பி பியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும் விரைவில் நல்ல செய்தி அறிவிக்கப்படும் என்றும் சரண் தெரிவித்துள்ளார். ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்ட எஸ் பி பிக்காக மருத்துவர்கள் நிறைய மருத்துவ சொற்பொழிவுகளை ஒலிபரப்பி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.