1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Modified: புதன், 28 ஜூன் 2023 (12:45 IST)

மறைந்த தந்தை குறித்து உருக்கமாக பதிவிட்ட சிவகார்த்திகேயன் - வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ் வைரல்!

சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு வந்து அசுர வளர்ச்சி அடைந்து கோலிவுட்டை அசர வைத்தவர் சிவகார்த்திகேயன். குட்டீஸ்களின் மனதில் ரஜினி, விஜய்யை அடுத்த இடத்தில் உள்ளார். சமீப காலமாக நடிப்பு தவிர படத் தயாரிப்பிலும் தன்னை ஈடுபடுத்தி கொண்டுள்ளார்.
 
மிகக்குறுகிய காலத்திலேயே தொடர்ந்து அடுத்தடுத்த வெற்றி திரைப்படங்களில் நடித்து முன்னை ஹீரோவாக டாப் இடத்தை பிடித்துவிட்டார். நடிப்பு,  தயாரிப்பு என இரண்டிலும் பிசியாக இருந்து வந்த சிவகார்த்திகேயன் புதிய தொழில் ஒன்றை துவங்க உள்ளாராம். ஆம், ஏசியன் சினிமாஸ் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து சிவகார்த்திகேயன் சென்னையில் (ASK) ஏசியன் சிவகார்த்திகேயன் சினிமாஸ் என்ற திரையரங்கை துவங்க உள்ளாராம். 
 
தற்ப்போது இந்த அளவுக்கு வளர்ந்திருக்கும் சிவகார்த்திகேயனுக்கு ஒரே குறை தான். இதையெல்லாம் பார்க்க அப்பா இல்லையே என பல மேடைகளில் கூறி கண்கலங்கியதுண்டு. இந்நிலையில் தன் தந்தையின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு ஒரு  காவல்துறை அதிகாரியாக அவர் எவ்வளவு சிறப்பாக பணியாற்றினார் என தனது வாட்ஸ் ஆப்பில் ஸ்டேட்டஸ் போட்ட பதிவு ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.