ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 1 டிசம்பர் 2020 (10:27 IST)

மாநாடுக்கு பிறகும் மீண்டும் சிம்புவை இயக்கும் வெங்கட்பிரபு!

நடிகர் சிம்புவை வைத்து வெங்கட்பிரபு குறைந்த பட்ஜெட்டில் மீண்டும் ஒரு படத்தை இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இளையதலைமுறை நடிகர்களில் அதிக ரசிகர்களை கொண்டவர்களில் சிம்புவை போல் ஒரு நடிகர் இல்லை என்றே கூறலாம். ஆனால் அவர் தனது ரசிகர்களை திருப்திப்படுத்தும் விதமாக திரைப்படங்கள் கொடுப்பதில் தவறி வருகிறார். சிம்பு ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகி விட்டார் என்றால் அந்த படத்தின் படப்பிடிப்பிற்கு அவர் சரியாக செல்ல மாட்டார் என்று பல வருடங்களாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இந்த தவறை சிம்பு இப்போதும் திருத்திக் கொள்வதாக தெரியவில்லை.

சில வருடங்களுக்கு முன்னர் ஞானவேல்ராஜா தயாரிக்கும் முஃப்தி என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமான சிம்பு, சரியான நேரத்தில் படப்பிடிப்பிற்கு வராததால் இந்த படமே டிராப் செய்யப்பட்டு விட்டதாக ஞானவேல்ராஜா அறிவித்தார். ஆனால் இப்போது அந்த படத்தை மீண்டும் தொடங்க உள்ளாராம் ஞானவேல் ராஜா. ஆனால் முன்பு படத்தை இயக்கிய நரதன் அந்த படத்தில் இருந்து விலகி விட்டாராம்.

அவருக்கு பதிலாக ஜில்லுனு ஒரு காதல் மற்றும் நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய கிருஷ்ணா மீதிப் படத்தை இயக்க உள்ளாராம். இந்நிலையில் மாநாடு படப்பிடிப்பு முடிந்ததும் இந்த படத்தில் கவனம் செலுத்த உள்ளாராம் சிம்பு. இதற்காக படக்குழுவினருடன் மாலத்தீவுகளுக்கு செல்ல உள்ளாராம். அங்கே மொத்தமாக சிம்பு நடிக்கும் காட்சிகளை எடுத்து முடிக்க உள்ளது படக்குழு. இந்த படங்களை எல்லாம் முடித்த பின்னர் சிம்பு மீண்டும் மாநாடு இயக்குனர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளாராம். இந்த படத்தை சிம்புவின் சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாம்.