1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 16 செப்டம்பர் 2022 (13:54 IST)

மீண்டும் படம் இயக்குவது எப்போது? சிம்பு சொன்ன பதில்!

நடிகர் சிம்பு இயக்குனராக தன்னுடைய அடுத்த படம் குறித்து பேசியுள்ளார்.

நடிகர் சிம்பு தொடர் தோல்விகளுக்குப் பிறகு மாநாடு படத்தின் வெற்றியின் மூலம் கம்பேக் கொடுத்துள்ளார். அதையடுத்து அவர் நடித்துள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படம் நேற்று ரிலீஸாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

இந்நிலையில் நடிகர் சிம்பு சமீபத்தில் அளித்த நேர்காணலில், இயக்குனராக தன்னுடைய அடுத்த படம் குறித்து பேசியுள்ளார். அதில் “வெந்து தணிந்தது காடு என்னுடைய 47 ஆவது படம். 50 ஆவது படம் முடிந்தவுடன் நான் மீண்டும் இயக்குனர் ஆகும் எண்ணம் உள்ளது. என் மனதுக்குள் சில திரைக்கதைகள் உள்ளன” எனக் கூறியுள்ளார்.

ஏற்கனவே சிம்பு மன்மதன் படத்துக்கு கதை எழுதியது மட்டுமில்லாமல் வல்லவன் திரைப்படத்தை இயக்கியும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.