1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: சனி, 10 ஜூலை 2021 (16:50 IST)

’’மாநாடு ‘’படக்குழுவினர் 300 பேருக்கு சிம்பு பரிசளிப்பு....

நடிகர் சிம்பு நடிப்பில், வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகிவரும் படம் மாநாடு. இந்த ஆண்டில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் இது. இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்து வருகிறார்.

இந்நிலையில், இப்பட ஷூட்டிங்கின்போது,ஒரு முக்கிய நிகழ்ச்சி நடந்துள்ளது.

அதாவது, மாநாடு பட ஷூட்டிங் முடிந்ததை அடுத்து, படக்குழுவினர் சுமார் 300 பேருக்கு  விலையுயர்ந்த கடிகாரம் பரிசாக வழங்கியுள்ளார் நடிகர் சிம்பு.

மேலும், மாநாடு படத்தில் இயக்குநர் வெங்கட் பிரபுவுக்கும் நடிகர் சிம்பு Fossil என்ற ஒரு கடிகாரம் பரிசளித்துள்ளார். மலேசிய நாட்டில் இதன் மதிப்பு ஒரு லட்சத்திற்கு மேல் என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.