1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 4 பிப்ரவரி 2021 (10:02 IST)

புதருக்குள் பூ போல் போஸ் கொடுத்த ஷிவானி - உறைந்து போன ரசிகர்கள்!

விஜய் டிவியில் ஒளிபரப்பான “கடைக்குட்டி சிங்கம்” என்ற நாடகத்தின் மூலம் சீரியல் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன். அதன் பின்னர் விஜய் டிவியிலிருந்து வெளியேறி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் முகம் காட்ட ஆரம்பித்தார்.
 
அதில் தற்போது “ரெட்டை ரோஜா” சீரியலில் இரட்டை வேடத்தில் நடித்து தமிழிக இல்லத்தரசிகளின் மனதில் குடி புகுந்துவிட்டார். இந்த கொரோனா வைரஸ் பரவுதலால் ஊரடங்கு உத்தரவின் கீழ் வீட்டிலேயே இருந்து வந்த ஷிவானி தினம் ஒரு கவர்ச்சி போட்டோவை இன்ஸ்டாவில் வெளியிட்டு குறுகிய காலத்தில் நயன்தாரா ரேஞ்சிற்கு பிரபலமானார்.
 
அதையடுத்து அவருக்கு பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது. அதிலிருந்து வெளியேறியதும் அம்மணி கவர்ச்சிக்கு பெரிய கேட் போட்டு இழுத்து மூடிவிட்டதாகவும் பிக்பாஸ் மூலம் கற்றுக்கொண்ட நல்ல விஷயமாக இனி அதை கடைபிடிக்க உள்ளார் எனவும் பேசப்பட்டது. அதுமட்டுமல்லாமல் ஆரி சொல்லி தான் ஷிவானி இப்படி மாறியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியது.
 
இந்நிலையில் தற்போது ஷிவானி கவர்ச்சி இல்லாமல் டீசண்டான உடையில் செடிகளுக்கு நடுவில் பூ போன்று சிரித்து போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை கண்டு ரசிகர்கள் ரசனையில் மூழ்கி கமெண்ட் செய்து வர்ணித்து வருகின்றனர்.