ஞாயிறு, 22 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 1 செப்டம்பர் 2021 (15:59 IST)

ஆபாசப் பட சர்ச்சை… கணவரை பிரிகிறாரா ஷில்பா ஷெட்டி!

நடிகை ஷில்பா ஷெட்டி தனது கணவரை பிரிய உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பிரபல பாலிவுட் நடிகையும் தமிழில் ஒரு சில படங்களில் நடித்தவருமான ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா. இவர் மும்பையில் நேற்று திடீரென கைது செய்யப்பட்டுள்ளார். ஆபாச படங்களை தயாரித்து செல்போன் செயலிகள் மூலம் இவர் பணம் சம்பாதிப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்தன. 

ராஜ்குந்த்ராவின் கைது பாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெண்கள் 3 பேர் தங்களை கட்டாயப்படுத்தி ஆபாச படத்தில் நடிக்க வைத்ததாக கூறி ராஜ்குந்த்ரா மீது புகார் அளித்ததை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு இப்போது காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இந்த விவகாரத்தில் கணவர் மேல் அதிருப்தியில் இருக்கும் ஷில்பா ஷெட்டி அவரை பிரிய உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் இது வெறும் வதந்தி என்றும் சொல்லப்படுகிறது.