1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 3 ஜூன் 2021 (12:28 IST)

பிரம்மாண்ட இயக்குனர்களைக் கண்டுகொள்ளாத தமிழ் சினிமா… தெலுங்கு பக்கம் ஒதுங்கிய 2 பேர்!

இயக்குனர்கள் ஷங்கர் மற்றும் முருகதாஸ் ஆகிய இருவருக்கும் தமிழில் பட வாய்ப்புகள் இல்லாததால் தெலுங்கு சினிமா பக்கம் ஒதுங்கியுள்ளனர்.

தமிழ் சினிமாவின் இரு பிரம்மாண்ட இயக்குனர்கள் என்றால் அது ஷங்கரும், ஏ ஆர் முருகதாஸூம்தான். தொடர்ந்து முன்னணி நடிகர்களை வைத்து இயக்கி வெற்றி பெற்ற இவர்களின் சம்பளமே 30 கோடிக்கும் மேல் இருக்கும். ஆனால் இவர்கள் இருவருக்குமே கடந்த சில ஆண்டுகள் தேய்பிறையாக அமைந்தன.

ஷங்கருக்கு ஐ, 2.0 ஆகிய படங்கள் பெரிய அளவில் வெற்றியைப் பெற்று தரவில்லை. அதுபோலவே இந்தியன் 2 படமும் தொடங்கி இரண்டு ஆண்டுகளாக முடியாமல் இழுத்துக் கொண்டு இருக்க, இப்போது ராம்சரண் தேஜாவை வைத்து படம் இயக்க அக்கட தேசம் சென்றுவிட்டார். அதேபோல தர்பார் தோல்வியால் முருகதாஸும், இங்கு வாய்ப்பில்லாமல் இப்போது ராம் பொத்லேனியை வைத்து ஒரு தெலுங்கு படத்தை இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.