1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 20 ஜூன் 2022 (08:34 IST)

“முதல்ல புதுப்பேட்டை 2… அதுக்கு அப்புறம்…” செல்வராகவன் கொடுத்த சூப்பர் அப்டேட்!

இயக்குனர் செல்வராகவன் சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசும் போது தன்னுடைய அடுத்த படங்களைப் பற்றி பேசியுள்ளார்.

இயக்குனர் செல்வராகவனின் சமீபத்தைய படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. அதுமட்டுமில்லாமல் மோசமான விமர்சனங்களையும் பெற்று வருகின்றன. இந்நிலையில் இப்போது அவர் தனுஷ் நடிப்பில் நானே வருவேன் படத்தை இயக்கி வருகிறார். மேலும் சில படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அவரின் முந்தைய படங்களான புதுப்பேட்டை மற்றும் ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படங்களின் இரண்டாம் பாகம் எப்போது வரும் என அவரது ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர். சமீபத்தில் ஒரு நிகழ்வில் கலந்துகொண்ட போது செல்வராகவன் பத்திரிக்கையாளர்களிடம் “விரைவில் இந்த படங்கள் வரும். முதலில் புதுப்பேட்டை 2 வரும். அதன் பின்னர் ஆயிரத்தில் ஒருவன் 2 வரும்” எனக் கூறியுள்ளார்.