1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 1 செப்டம்பர் 2021 (13:28 IST)

’எதற்கும் துணிந்தவன்’ படத்தில் இணைந்த ‘நெற்றிக்கண்’ நடிகர்!

சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் என்ற படத்தில் நயன்தாரா நடித்த நெற்றிக்கண் திரைப்படத்தில் நடித்த நடிகர் ஒருவர் இணைந்துள்ள தகவல் தற்போது வெளிவந்துள்ளது
 
சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் டி இமான் இசையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் திரைப்படம் எதற்கும் துணிந்தவன். இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் காரைக்குடியில் முடிவடைந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் நடைபெற உள்ளது 
 
இந்த நிலையில் இந்த படத்தில் நடிகர் சரண் சக்தி இணைந்து உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இவர் ஏற்கனவே நயன்தாரா நடித்த நெற்றிக்கண் என்ற திரைப்படத்தில் நடித்து இருந்தார் என்பதும் அதற்கு முன்னர் வடசென்னை படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
எதற்கும் துணிந்தவன் படத்தில் சரண் சக்திக்கு முக்கிய கேரக்டர் என்றும் இந்த படம் வெளிவந்தால் அவருக்கு தமிழ் திரையுலகில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது