1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 27 ஏப்ரல் 2023 (07:14 IST)

‘பொன்மனக் கலைஞன்’… சமுத்திரக்கனிக்கு வித்தியாசமான பட்டம் கொடுக்கும் தம்பிராமையா!

தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நகைச்சுவை நடிகராகவும் அறியப்படுபவர் தம்பி ராமையா. இவர் இயக்கத்தில் வடிவேலு நடிப்பில் உருவான இந்திரலோகத்தில் நா அழகப்பன் திரைப்படம் கவனத்தைப் பெற்றது. அதன் பின்னர் மைனா படம் மூலமாக முன்னணி நடிகராகிவிட்ட இவர் தொடர்ந்து நடித்து வருகிறார்.

இந்நிலையில் இப்போது அவர் கதை, திரைக்கதை, வசனம், இசை மற்றும் பாடல்கள் எழுதி ராஜாக்கிளி என்ற படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். மேலும் இந்த படத்தில் சமுத்திரக்கனி கதாநாயகனாக நடிக்க உள்ளார்.

இந்த படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ள நிலையில், இந்த படத்தில் சமுத்திரக்கனிக்கு ‘பொன்மனக் கலைஞன்’ என்ற புதிய பட்டத்தை தம்பி ராமையா டைட்டிலில் கொடுத்துள்ளாராம். அதனால் இனிமேல் படங்களில் சமுத்திரக்கனி இந்த டைட்டிலை பயன்படுத்துவார் என சொல்லப்படுகிறது.