1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Updated : ஞாயிறு, 13 டிசம்பர் 2020 (11:09 IST)

அந்த வட்டாரத்தில் நடிகைகளுக்கு மரியாதை இல்லையா?! – சாய் பல்லவி கருத்தால் சர்ச்சை!

தென் இந்திய மொழி படங்களில் பிரபலமாக நடித்து வரும் நடிகை சாய் பல்லவி சமீபத்தில் கூறியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மலையாளத்தில் ப்ரேமம் படம் மூலமாக பிரபலமாகி தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல தென்னிந்திய மொழிகளில் நடித்தவர் சாய் பல்லவி. டிவி சேனலின் டான்ஸ் போட்டி மூலமாக வந்து சினிமாவில் நுழைந்த இவர் சினிமாவிலும் டான்ஸ் மூலமாக தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துள்ளார். மாரி2 படத்தில் இவர் ஆடிய ரௌடி பேபி பாடல் 1 பில்லியன் பார்வையாளர்களை தாண்டி சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் மலையாள சினிமா மற்றும் தெலுங்கு சினிமா குறித்து பேசிய சாய் பல்லவி “மலையாள சினிமாவில் எல்லாரையும் சமமாக நடத்துவார்கள். ஆனால் தெலுங்கி சினிமாவில் ஒவ்வொருவர் மீதும் தனி அக்கறை காட்டுகிறார்கள்” என கூறியுள்ளார்.