1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Modified: வெள்ளி, 23 ஜூன் 2023 (13:53 IST)

அவர் என்னுடன் இல்லை... நாங்க பிரிஞ்சிட்டோம்.... வேதனையுடன் ராஷ்மிகா வெளியிட்ட அறிக்கை!

இந்திய சினிமாவின் டாப் நடிகைகள் லிஸ்டில் இடம் பிடித்திருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா கிரிக் பார்ட்டி என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் புகழ் பெற்றார். அறிமுக படமே அவருக்கு விருதுகள் குவித்தது. 
 
அதை தொடர்ந்து கன்னடம், தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவர் க்ரிக் பார்ட்டி படத்தில் ஹீரோவாக நடித்த ரக்‌ஷித் ஷெட்டியை காதலித்து நிச்சயதார்த்தம் வரை சென்று பின்னர் கீதா கோவிந்தம் ஹிட் அடித்ததால் அவரை கழட்டிவிட்டு விஜயதேவரகொண்டா மீது காதலில் விழுந்தார். 
 
தொடர்ந்து கிசுகிசுக்கப்பட்டு வருகிறார். இதனிடையே இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வரும் ராஷ்மிகா மந்தனா தற்போது அண்மையில் தான் பெரிதும் நம்பியிருந்த மேனேஜர் என்னிடம் இருந்து ரூ.80 லட்சம் ஏமாற்றிவிட்டதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். 
 
இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், நாங்கள் இருவரும் பிரிந்துவிடும். இப்போது எங்களுக்குள் எந்த மோதல்களும் இல்லை. எங்களை குறித்து வெளியாகும் செய்தி அனைத்தும் பொய்யானவை. எங்களின் இந்த பிரிவு சுமூகமானது என அறிக்கை வெளியிட்டுள்ளார்.