1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 25 டிசம்பர் 2021 (09:53 IST)

மீண்டும் தொடங்கிய ராம்-நிவின்பாலி பட ஷூட்டிங்!

இயக்குனர் ராம் இயக்கத்தில் நிவின் பாலி மையக் கதாபாத்திரத்தில் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் மீண்டும் ராமேஸ்வரத்தில் தொடங்கியுள்ளது.

இயக்குனர் ராம் பேரன்பு படத்துக்குப் பிறகு நிவின் பாலி நடிப்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் தமிழ் மற்றும் மலையாளம் என இருமொழிகளிலும் உருவாகி வருகிறது. இந்த படத்தில் அஞ்சலி மற்றும் சூரி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கடந்த மாதம் தொடங்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இதையடுத்து தயாரிப்பாளர் மாநாடு படத்தின் ரிலீஸில் பிஸியாக இருந்ததால் இந்த படத்துக்கு ஒரு சிறு இடைவேளை விடப்பட்டு இருந்தது. இதையடுத்து இப்போது மீண்டும் ராமேஸ்வரத்தில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. தொடந்து ஒரு மாதம் நடக்கும் இந்த படப்பிடிப்போடு பெரும்பாலானக் காட்சிகள் படமாக்க பட்டு முடிக்க உள்ளதாம். ஜனவரி மாதத்துக்குள் மொத்த படமும் முடிக்கப்படும் என சொல்லப்படுகிறது.