1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 11 மே 2021 (15:37 IST)

ரஜினியை கவர்ந்த கார்த்திக் சுப்பராஜின் திரைப்படம்… உடனடியாக எடுத்த முடிவு!

நடிகர் ரஜினிகாந்த் கார்த்திக் சுப்பராஜின் அடுத்த படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

துல்கர் சல்மான், ரக்சன், ரிதுவர்மா உள்ளிட்ட பலரது நடிப்பில் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவான படம் ’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால். இந்த திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. மேலும் இந்த படம் வெளியான ஒரு சில வாரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் உடனே ஓடிடி தளத்திலும் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்கள் பலர் பாராட்டி வந்த நிலையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் பாராட்டியுள்ள தகவல் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து இயக்குனர் தேசிங்கு பெரியசாமி தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: "சூப்பர்.. எக்ஸலண்ட்.. ஹா.. ஹா.. ஹா.. வாழ்த்துக்கள்.. பெரிய ஃபியூச்சர் இருக்கு உங்களுக்கு. எனக்கும் ஏதாவது கதை இருந்தா ரெடி பண்ணுங்க’ என தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்து இருந்தார். அதையடுத்து இப்போது இயக்குனர் தேசிங் பெரியசாமி ஒரு கதையை தயார் செய்துள்ளாராம். அதை விரைவில் ரஜினிக்கும் சொல்லி அவருக்கும் கதை பிடித்துப் போக, இப்போது திரைக்கதை அமைக்கும் பணிகளை தேசிங் மேற்கொண்டு வருவதாக சொல்லப்பட்டது.

இந்நிலையில் ரஜினி கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய ஜகமே தந்திரம் திரைப்படத்தை பார்த்து மிகவும் பிடித்து போனதால் உடனடியாக மீண்டும் நாம் இணைந்து ஒரு படம் பண்ணலாம் எனக் கூறிவிட்டாராம். ஏற்கனவே பேட்ட சமயத்தில் ரஜினிக்கு ஒரு கதையை கார்த்திக் சுப்பராஜ் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தேசிங் பெரியசாமி படத்துக்கு முன்பாகவே ரஜினி கார்த்திக் சுப்பராஜின் படத்தின் நடிக்க வாய்ப்புகள் உள்ளதாக சொல்லப்படுகிறது.