1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By mahendran
Last Modified: புதன், 22 செப்டம்பர் 2021 (16:12 IST)

ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டனுக்கு அபராதம்! இதுதான் காரணமாம்!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நேற்று கடைசி ஓவர் திரில் வெற்றியை ருசித்தது.

நேற்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பஞ்சாப் அணியின் கையில் வெற்றி இருந்த நிலையில் கடைசி ஓவரில் சொதப்பிய காரணத்தினால் பரிதாபமாக வெற்றியை கோட்டை விட்டது. நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 185 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய பஞ்சாப் அணி கடைசி ஓவர் சொதப்பலால் 2 ரன்களில் தோல்வி அடைந்தது.

இந்நிலையில் கடைசி நேரத்தில் ஆட்டத்தின் பரபரப்பின் போது குறிப்பிட்ட நேரத்தில் பந்து வீசி முடிக்காத ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு 12 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.