1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Murugan
Last Modified: வியாழன், 4 மே 2017 (16:34 IST)

ரஜினியோடு விரைவில் இணைவேன் - ராஜமௌலி பேட்டி

நடிகர் ரஜினிகாந்தை வைத்து ஒரு படம் இயக்க தான் விரும்புவதாக பாகுபலி இயக்குனர் ராஜமௌலி பேட்டியளித்துள்ளார்.


 

 
ராஜமௌலியின் இயக்கத்தில் வெளியான பாகுபலி2 படம் இந்திய சினிமா உலகில் இதுவரை எந்த படம் செய்யாத வசூலை குவித்து வருகிறது. படம் வெளியாகி 6 நாளில் சுமார் ரூ.600 கோடியை இந்தப்படம் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
 
இந்நிலையில், ராஜமௌலியும், ரஜினியும் இணைந்தால் அது அவதார் படத்தை மிஞ்சும் திரைப்படமாக இருக்கும் என சமீபத்தில் ஒரு மலையாள இயக்குனர் கருத்து தெரிவித்திருந்தார். 
 
இந்நிலையில், ஒரு பிரபல ஆங்கில தொலைக்காட்சிக்கு இயக்குனர் ராஜமௌலி அளித்த பேட்டியில் “ரஜினிகாந்த் ஒரு மிகப்பெரிய நடிகர். அவரை வைத்து படம் இயக்க வேண்டும் எனப்து பல இயக்குனர்களின் கனவாக இருக்கிறது. நானும் அவரை வைத்து படம் இயக்க வேண்டும் என விரும்புகிறேன். ஆனால், அவரின் இமேஜிற்கு ஏற்றவாறு கதை கிடைக்க வேண்டும். அப்படி நடந்தால், அவருடன் கண்டிப்பாக இணைவேன். அது நடந்தால் நான் பாக்கியசாலி” என அவர் கூறினார்.