வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 23 ஜூலை 2021 (17:50 IST)

கைதில் இருந்து தப்பிக்க 25 லட்சம் வழங்கிய ராஜ் குந்த்ரா… அடுத்தடுத்து வரும் புகார்!

ஆபாச படமெடுத்தது சம்மந்தமாக கைது செய்யப்பட்ட ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.

பிரபல பாலிவுட் நடிகையும் தமிழில் ஒரு சில படங்களில் நடித்தவருமான ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா. இவர் மும்பையில் நேற்று திடீரென கைது செய்யப்பட்டுள்ளார். ஆபாச படங்களை தயாரித்து செல்போன் செயலிகள் மூலம் இவர் பணம் சம்பாதிப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்தன. 

ராஜ்குந்த்ராவின் கைது பாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெண்கள் 3 பேர் தங்களை கட்டாயப்படுத்தி ஆபாச படத்தில் நடிக்க வைத்ததாக கூறி ராஜ்குந்த்ரா மீது புகார் அளித்ததை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது. இந்நிலையில் அவருக்கு நீதிமன்றம் 3 நாட்கள் போலிஸ் காவல் அளித்து சிறையில் அடைத்துள்ளது.

இந்நிலையில் மும்பை ஊழல் தடுப்பு போலிஸாருக்கு வந்த மின்னஞ்சல்களில் ராஜ் குந்த்ரா இந்த வழக்கில் தான் கைதாகாமல் இருக்க மும்பை போலிஸாருக்கு சுமார் 25 லட்சம் வரை லஞ்சம் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அது சம்மந்தமாக இப்போது விசாரணை நடந்து வருகிறது.