1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 28 ஜூன் 2024 (07:22 IST)

படை தலைவன் படத்தில் இருந்து விலகினாரா ராகவா லாரன்ஸ்?

மறைந்த நடிகர் விஜயகாந்தின் இளைய மகன் சண்முகபாண்டியன் மதுர வீரன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால் இன்னும் அவர் ஹிட் கொடுக்க முடியாமல் போராடி வருகிறார். இவர் நடித்த ‘மதுர வீரன்’ திரைப்படம் பெரிய வெற்றியை பெறவில்லை என்றாலும் ஓரளவு அவருக்கான  அடையாளத்தைப் பெற்று தந்தது.

இந்நிலையில் இப்போது சண்முகபாண்டியன் காட்டையும் யானைகளையும் பின்னணியாகக் கொண்ட படை தலைவன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை வால்டர் மற்றும் ரேக்ளா ஆகிய படங்களை இயக்கிய அன்பு இயக்கியுள்ளார். படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் மொத்தக் காட்சிகளும் படமாக்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் சண்முகபாண்டியனுக்காக தானொரு சிறப்பு வேடத்தில் நடிக்க உள்ளதாக ராகவா லாரன்ஸ் அறிவித்தார். அதனால் அவருக்காக காட்சிகளை உருவாக்கி படக்குழு காத்திருந்த நிலையில் கால்ஷீட் கொடுக்காமல் இழுத்தடித்துள்ளார். இதனால் அவருக்காக உருவாக்கியக் காட்சிகளை ஏஐ தொழில்நுட்பம் மூலமாக விஜயகாந்தை வைத்து எடுத்து படத்தில் இணைக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.