சனி, 28 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 21 ஜூன் 2024 (11:07 IST)

ராகவா லாரன்ஸுக்காகக் காத்திருக்கும் படை தலைவன் படக்குழு… இப்படி இழுத்தடிக்கலாமா?

மறைந்த நடிகர் விஜயகாந்தின் இளைய மகன் சண்முகபாண்டியன் மதுர வீரன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால் இன்னும் அவர் ஹிட் கொடுக்க முடியாமல் போராடி வருகிறார். இவர் நடித்த ‘மதுர வீரன்’ திரைப்படம் பெரிய வெற்றியை பெறவில்லை என்றாலும் ஓரளவு அவருக்கான  அடையாளத்தைப் பெற்று தந்தது.

இந்நிலையில் இப்போது சண்முகபாண்டியன் காட்டையும் யானைகளையும் பின்னணியாகக் கொண்ட படை தலைவன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை வால்டர் மற்றும் ரேக்ளா ஆகிய படங்களை இயக்கிய அன்பு இயக்கியுள்ளார். படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார். பெரும்பாலான காட்சிகள் கேரளாவில் படமாக்கப்பட்டுள்ளன. ஷூட்டிங் 80 சதவீதம் அளவுக்கு முடிந்துள்ள நிலையில் இன்னும் 10 நாட்கள் மட்டும் மீதமுள்ளது.

இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் தானாக முன்வந்து சண்முகபாண்டியனுக்காக ஒரு கௌரவ வேடத்தில் நடிக்கிறேன் என அறிவித்தார். அதற்காக படக்குழுவினர் புதிதாக சில காட்சிகளை எழுதி தயாராகியும், இன்னும் கால்ஷீட் கொடுக்காமல் இழுத்தடிக்கிறாராம் லாரன்ஸ். இன்னும் அவர் சம்மந்தப்பட்ட ஒரு சண்டைக் காட்சி மட்டும் படமாக்கப்பட வேண்டியுள்ளதால் அவர் எப்போது கால்ஷீட் கொடுப்பார் என படக்குழுவினர் காத்திருக்கிறார்களாம்.